உலகின் ஆறாவது பெரிய கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இலங்கையில் அபான்ஸ் ஆட்டோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
இதன்படி, ஹூண்டாய் கார்கள் மற்றும் பிற உபகரணங்களை இலங்கையில் அசெம்பிள் செய்வதற்கும் உற்பத்தி செய்வதற்கும் அபான்ஸ் ஆட்டோ நிறுவனத்திற்கு அங்கீகாரம் வழங்கப்படும்.
உலகம் முழுவதும் கார் அசெம்பிளி தொழிற்சாலைகளை அமைப்பதில் ஹூண்டாய் விரிவான அனுபவத்தைக் கொண்டுள்ளது மற்றும் தற்போது அமெரிக்கா, செக் குடியரசு மற்றும் இந்தியா உட்பட எட்டு நாடுகளில் செயல்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற கொரிய கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் மற்றும் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் அபான்ஸ் ஆட்டோ நிறுவனம் இடையே 2020 இல் தொடங்கிய நீண்ட கலந்துரையாடலின் விளைவாக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அபான்ஸ் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது .
#SriLankaNews
Leave a comment