5472
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மருத்துவருக்கு பதிலாக கணவர் சிகிச்சை! – நாய் உயிரிழப்பு!

Share

வெயங்கொட, பத்தலகெதர பிரதேசத்திலுள்ள மிருக வைத்திய நிலையமொன்றில், பெண் மிருக வைத்தியருக்கு பதிலாக அவரது கணவர் சிகிச்சை வழங்கியதால், நாயொன்று உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் குறித்த நாயின் உரிமையாளர், வெயங்கொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த மிருக வைத்திய நிலையத்தின் பெண் மிருக வைத்தியர், குழந்தை பேற்றுக்குப் பின்னர் வீட்டில் ஓய்வில் இருப்பதாகவும் அவருக்கு பதிலாக அவரது கணவர் மிருகங்களுக்கு சிகிச்சை வழங்குவதாகவும் தெரியவருகிறது.

தமது நாய்க்கு அந்த மிருக வைத்திய நிலையதால் சிகிச்சை பெற்ற பின்னர் நாய் உயிரிழந்ததாக தெரிவித்து பெண் மிருக வைத்தியருக்கு எதிராக வெயங்கொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த நாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெருமதியான ஜெர்மன் ஷெப்பட் இன நாய் என்றும் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...