rtjy 303 scaled
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவில் மனைவியை கொலை செய்து குழி தோண்டி புதைத்த கணவன்

Share

முல்லைத்தீவில் மனைவியை கொலை செய்து குழி தோண்டி புதைத்த கணவன்

முல்லைத்தீவு– நீராவிப்பிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் பெண்ணொருவரின் சடலம் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சடலம் (24.10.2023) மீட்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த கீதா என்னும் 23 வயதுடைய பெண் ஒருவர் முள்ளியவளை குமாரபுரத்தை சேர்ந்த 23 வயதுடைய ஆண் ஒருவரை திருமணம் முடித்து நீராவிபிட்டி கிழக்கு பகுதியிலுள்ள வாடகை வீடொன்றில் கடந்த மூன்று வாரமாக வசித்து வந்துள்ளனர்.

குறித்த இளம் குடும்பபெண் தொலைபேசியில் தனது தாயாரிடம் நாளாந்தம் உரையாடுவதாகவும் கடந்த 21.10.2023 திகதிக்கு பின்னர் மகளின் தொலைபேசி துண்டிக்கப்பட்டிருந்ததாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தாயார் நேற்றையதினம் 23.10.2023 மகளும் மருமகனும் வசிக்கும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர்கள் தங்கி இருந்த வீட்டின் பின்புறம் புதிதாக மண்ணால் நிரப்பட்ட குழி ஒன்று இருப்பதை அவதானித்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த பெண்ணின் தாயார் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இந்த முறைப்பாட்டை தொடர்ந்து தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று அகழ்வு பணியினை முன்னெடுத்திருந்தனர்.

இதனையடுத்து குறித்த இளம் குடும்பபெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டு வீட்டின் பின்புறத்தில் புதைக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெண்ணின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கணவரை கொழும்பு வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மனைவி கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....