image 188
இலங்கைசெய்திகள்

பொல்லால் அடித்து கணவர் கொலை! – அவிசாவளையில் பயங்கரம்

Share

அவிசாவளை பகுதியில் மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவர் உயிரிழந்துள்ளார்.

அவிசாவளை –தைகல பகுதியில் நேற்று இரவு இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

மதுபோதையில் வருகை தந்த கணவர் நேற்றிரவு மனைவியை தாக்கியுள்ளார். இதனால் மனைவி கணவரை பொல்லால் தாக்கியுள்ளார். இந்த நிலையில் சம்பவ இடத்திலேயே கணவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது

இதனையடுத்து மனைவி 8 வயதான மகளை மாமியார் வீட்டில் ஒப்படைத்து விட்டு பொலிஸ் நிலையம் சென்று சரணடைந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஜனக்க மதுஷங்க ஜயதிலக்க என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்.

இளைஞனின் சடலம் அவிசாவளை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கான ஒப்படைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – மலேசியா இடையே புதிய வான்வழி இணைப்பு: பாட்டிக் ஏர் தனது சேவையைத் தொடங்கியது!

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான இணைப்பை வலுப்படுத்தும் ஒரு புதிய மைல்கல்லாக, பாட்டிக் ஏர் மலேசியா...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொட்டகமுவ மும்முறை கொலை வழக்கு: 18 ஆண்டுகளின் பின் நான்கு சந்தேக நபர்கள் விடுதலை!

கடந்த 2006-ஆம் ஆண்டு பாலப்பிட்டிய, தொட்டகமுவ பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யக்கல கட்சி அலுவலக விவகாரம்: ஜே.வி.பி-யிடம் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

யக்கல (Yakkala) பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை ஜனதா விமுக்தி பெரமுன...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகோடா ராஜினாமா: புதிய பதில் தலைவர் நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களின் தலைவராகப் பணியாற்றி வந்த...