Gotabaya Rajapaksa
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாபய தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை

Share

முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் கோட்டாபய ராஜபக்சவுக்கு சட்டப்பூர்வமாக கிடைக்க வேண்டிய பாதுகாப்பு உள்ளிட்ட வரப்பிரதாசங்களை ஏற்படுத்திக்கொடுக்கவும்.

இவ்வாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவால், ஜனாதிபதிக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

” முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு சட்டப்பூர்வமாக கிடைக்க வேண்டிய பாதுகாப்பு தொடர்பான உத்தரவாதம் கிடைக்காமையால், கோட்டாபய ராஜபக்சவுக்கு நாடு திரும்ப முடியாதுள்ளது என மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

எந்தவொரு பிரஜைக்கும் தமது நாட்டுக்கு வருவதற்கான உரிமை இருக்க வேண்டும்.

எனவே, முன்னாள் ஜனாதிபதிக்கு சட்டப்பூர்வமாக கிடைக்க வேண்டிய வரப்பிரதாசம் உள்ளிட்ட சலுகைகள் கோட்டாபய ராஜபக்சவுக்கும் வழங்கப்பட வேண்டும். பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும். அவரின் குடும்பத்தாரும் நாட்டுக்கு வருவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். ” – எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ampitiya therar
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழர்களுக்கு எதிரான வன்முறைக் கருத்து: அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்குப் பிடிவிறாந்து, பயணத்தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களையும், தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்’ என...

24 6719ef7b673a7
அரசியல்செய்திகள்

டயானா கமகே கடவுச்சீட்டு விசா வழக்கு: மேலதிக சாட்சியங்களுக்காக பிப். 16க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத்...

Waqf Board Donates Rs 10 Million 1170x658 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் சேதமடைந்த மதத் தலங்களைப் புனரமைக்க: வக்ஃப் சபை 10 மில்லியன் நிதி நன்கொடை!

கடந்த காலத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த மதஸ்தலங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்காக, வக்ஃப் சபையினால்...

Untitled
அரசியல்இலங்கைசெய்திகள்

கிராம உத்தியோகத்தர்களுக்கு எதிரான பொதுவான குற்றச்சாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் – இம்ரான் மகரூப் கோரிக்கை!

நாட்டிலுள்ள ஒட்டுமொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும்,...