tamilni 18 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பு நோக்கி வந்த ரயிலில் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம்

Share

கொழும்பு நோக்கி வந்த ரயிலில் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம்

தெமோதர ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் மீது மரம் ஒன்று வீழ்ந்ததன் காரணமாக நேற்று இரவு மலையகப் பாதையில் செல்லும் ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டது.

எனினும் அப்போது பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தெமோதர நிலையத்தை அடையவிருந்த நிலையில் ரயில் பரிசோதகரின் அவதானிப்பு காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

குறித்த மரம் முறிந்து விழும் நிலையில் இருந்ததைக் கண்ட வீதி பரிசோதகர், உடனடியாக இது தொடர்பில் தெமோதர ரயில் நிலைய அதிபருக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, உடனடியாகச் செயற்பட்ட ரயில் நிலைய அதிபர், ரயில் நிலையத்திற்குள் நுழைவதற்கு உரிய சமிக்ஞைகளை வழங்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். பின்னர், அந்த இடத்தைச் சரிபார்க்க சென்றபோது, ​​குறித்த மரம் முறிந்து விழுந்தது. இதனால், பெரும் விபத்து தவிர்க்க முடிந்தது.

பின்னர், ரயில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நிறுத்தப்பட்டு, ரயில் பாதை சீரமைக்கப்பட்ட பின்னர், ரயில் கொழும்புக்கு இயக்கப்பட்டது.

Share
தொடர்புடையது
body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...

Fire Breaks 1
இலங்கை

கொழும்பில் மாத்திரம் இத்தனை தீ விபத்துக்களா?

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து...

பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...