இலங்கையின் கடவுச்சீட்டு பிடித்துள்ள இடம்
இலங்கைசெய்திகள்

இலங்கையின் கடவுச்சீட்டு பிடித்துள்ள இடம்

Share

இலங்கையின் கடவுச்சீட்டு பிடித்துள்ள இடம்

2023ஆம் ஆண்டுக்கான உலகின் பலமான அல்லது சிறந்த கடவுச்சீட்டு கொண்ட நாடுகளின் தரவரிசையில் இலங்கை முன்னேறியுள்ளது.

சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் உத்தியோகப்பூர்வ தரவுகளின் அடிப்படையில் Henley Passport Index நிறுவனம் மேற்கொண்டுள்ள தரப்படுத்தலில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதன்படி இலங்கையின் கடவுச்சீட்டு கடந்த வருடத்தில் இருந்து எட்டு இடங்கள் முன்னேறி 95ஆவது இடத்தைப் பெற்றுள்ளதாக குறித்த தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கடவுச்சீட்டினை பயன்படுத்தி விசா இல்லாமலோ அல்லது ஒன் – அரைவல் விசா மூலமோ 41 நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ள முடியும் என்ற அடிப்படையில், தரவரிசையில் இலங்கை முன்னேறியுள்ளது.

சிங்கப்பூர், மாலைதீவு, பாகிஸ்தான், நேபாளம், கம்போடியா, லாவோஸ், தஜிகிஸ்தான், பஹாமாஸ், டொமினிக்கா, மடகாஸ்கர் மற்றும் சீஷெல்ஸ் உள்ளிட்ட 41 நாடுகளுக்கு இலங்கை இந்த வசதியை வழங்கியுள்ளது.

இதேவேளை 57 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலை வழங்கும் இந்திய கடவுசீட்டு ஐந்து இடங்கள் முன்னேறி 80 வது இடத்தைப் பிடித்துள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் ஐந்து ஆண்டுகளாக முதலிடத்தை தக்கவைத்திருந்த ஜப்பான், முதல் முறையாக 3ஆவது இடத்திற்கு தரமிறங்கியுள்ள நிலையில் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த கடவுசீட்டை கொண்ட நாடாக சிங்கப்பூர் மாறியுள்ளது.

மேலும் ஆப்கானிஸ்தான் இந்த தரவின் அடிப்படையில் இறுதி இடத்தை பிடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
dom penzionera 2
செய்திகள்உலகம்

போஸ்னியாவில் முதியோர் இல்லத்தில் கோரத் தீ விபத்து: 11 பேர் பலி; 30-க்கும் மேற்பட்டோர் காயம்!

போஸ்னியாவின் துஸ்லா நகரில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 04) மாலை ஏற்பட்ட...

Dr. Nalinda Jayathissa 2024.08.23 1
செய்திகள்இலங்கை

ஏற்றுமதி கஞ்சா திட்டம்: ‘உள்ளூர் சந்தையில் நுழைய வாய்ப்பில்லை; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ – அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ!

இலங்கையில் ஏற்றுமதி நோக்கங்களுக்காக முதலீட்டு மண்டலங்களில் (Investment Zones) மேற்கொள்ளப்படும் கஞ்சா பயிர்ச்செய்கை திட்டம் தொடர்பான...

crime arrest handcuffs jpg
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

அதிபர் மற்றும் மகன் கைது: ₹ 20 மில்லியன் மதிப்புள்ள ஹெராயினுடன் எப்பாவல ஹோட்டலில் சிக்கினர்!

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் (Heroin) ஒரு பாடசாலை...

10 signs symptoms of drug addiction scaled 1
செய்திகள்இலங்கை

கொழும்பில் அதிர்ச்சி: போதைப்பொருளுக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு – அமைச்சகம் கடும் கவலை!

கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறித்துச்...