கொழும்பில் பாரிய மோசடி!

tamilni 535

கொழும்பில் பாரிய மோசடி!

கொழும்பில், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை வாங்கி தருவதாக கூறி குழு ஒன்று மக்களை ஏமாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பு– கொம்பனித் தெரு மற்றும் மோதர பிரதேசத்தில் அமைந்துள்ள வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 2 அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை வழங்குவதாக கூறியே குறித்த குழு மக்களை ஏமாற்றியுள்ளது.

இதன்போது மக்களிடமிருந்து சுமார் 150 கோடி ரூபாவை குறித்த குழு மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மோசடியில் பல்வேறு தரத்தில் உள்ளவர்கள் ஈடுபட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த விடயம் தொடர்பில் தொடர்ச்சியாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Exit mobile version