தென்னிலங்கையில் வைத்தியசாலைக்கு வந்தவர்களால் பதற்ற நிலை
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் வைத்தியசாலைக்கு வந்தவர்களால் பதற்ற நிலை

Share

தென்னிலங்கையில் வைத்தியசாலைக்கு வந்தவர்களால் பதற்ற நிலை

களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக நேற்று பிற்பகல் நோயாளர்களைப் பார்க்க வந்த நோயாளிகள் குழுவிற்கும் தனியார் மருத்துவமனை பாதுகாப்புப் பணியாளர்கள் குழுவிற்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நோயாளர்களைப் பார்க்க வந்த நபர் ஒருவரும், தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவரின் உடல்நிலையைப் பார்ப்பதற்காக சுமார் 5 பேர் வந்திருந்ததாகவும், அவர்கள் வைத்தியசாலை வளாகத்துக்குள் செல்வது தொடர்பான கருத்த மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன் காரணமாக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நோயாளி ஒருவரைப் பார்க்க வந்த ஒருவரிடமிருந்து அனுமதிப் பத்திரத்தை பாதுகாப்பு உத்தியோகத்தர் பறித்துச் சென்றதாகவும், அங்கு ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில், கிட்டத்தட்ட 15 பேர் அடிதடியில் ஈடுபட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

தாக்குதல் நடத்திய இருவரும் நாகொட பொது வைத்தியசாலையின் ஒரே பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதலில் மேலும் பலர் லேசான காயம் அடைந்தனர்.

சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை மேலும் நாகொட பொது வைத்தியசாலை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...