2021 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் இம் மாதம் இறுதி வாரத்திலோ அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்திலோ வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன அறிவித்துள்ளார்.
இதேவேளை, 2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக்கு தோற்றாத மாணவர்களுக்காக இம்மாதம் 19, 20 மற்றும் 21 ஆம் திகதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews
Leave a comment