kovil
இலங்கைசெய்திகள்

சுகாதார விதிமீறி கும்பாபிஷேகம் – 6 பேருக்கு தொற்று!

Share

சுகாதார விதிமீறி கும்பாபிஷேகம் – 6 பேருக்கு தொற்று!

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலில் சுகாதார விதிமுறைகளை மீறி கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியா ஓமந்தை நொச்சிக்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடத்த ஆலய நிர்வாகத்தினரால் சுகாதாரப்பிரிவிடம் அனுமதி கோரப்பட்டது.

இந்த நிலையில், தற்போதைய கொரோனாப் பரவல் காரணமாக 9 பேருக்கே சுகாதாரப் பிரிவினர் அனுமதி வழங்கியிருந்தனர்.

ஆனால் ஆலயத்தில் 20 பேருக்கு மேல் ஒன்றுகூடியுள்ளனர் எனவும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றவில்லை எனவும் சுகாதாரப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து அங்கு சென்ற சுகாதாரப் பிரிவினர் அங்கு நின்ற 20 பேரிடமும் அன்டிஜென் பரிசோதனை மேற்கொண்டனர்.

இதில் ஆலயக் குருக்கள் உட்பட 6 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து ஆலயம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்புடையவர்களையும் சுகாதாரப் பிரிவினர் தனிமைப்படுத்தியுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...