kovil
இலங்கைசெய்திகள்

சுகாதார விதிமீறி கும்பாபிஷேகம் – 6 பேருக்கு தொற்று!

Share

சுகாதார விதிமீறி கும்பாபிஷேகம் – 6 பேருக்கு தொற்று!

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலில் சுகாதார விதிமுறைகளை மீறி கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியா ஓமந்தை நொச்சிக்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடத்த ஆலய நிர்வாகத்தினரால் சுகாதாரப்பிரிவிடம் அனுமதி கோரப்பட்டது.

இந்த நிலையில், தற்போதைய கொரோனாப் பரவல் காரணமாக 9 பேருக்கே சுகாதாரப் பிரிவினர் அனுமதி வழங்கியிருந்தனர்.

ஆனால் ஆலயத்தில் 20 பேருக்கு மேல் ஒன்றுகூடியுள்ளனர் எனவும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றவில்லை எனவும் சுகாதாரப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து அங்கு சென்ற சுகாதாரப் பிரிவினர் அங்கு நின்ற 20 பேரிடமும் அன்டிஜென் பரிசோதனை மேற்கொண்டனர்.

இதில் ஆலயக் குருக்கள் உட்பட 6 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து ஆலயம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்புடையவர்களையும் சுகாதாரப் பிரிவினர் தனிமைப்படுத்தியுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...