3 7
இலங்கைசெய்திகள்

கோபா குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா – சஜித்தால் தொடரும் இழுபறி

Share

கோபா குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா – சஜித்தால் தொடரும் இழுபறி

கோபா (COPA) குழுவின் தலைமைப் பதவிக்கு ஹர்ஷ டி சில்வாவை ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நியமிக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் கோபா குழுவின் தலைமைப் பதவியை எதிரணிக்கு வழங்குவதற்கு அநுர அரசு தீர்மானித்துள்ளது.

அரசாங்க கணக்குகள் பற்றிய கோபா (COPA) குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு அல்லது கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலையில் நாடாளுமன்றத்தில் கோபா குழுவின் தலைமைப் பதவியை ஹர்ஷ டி சில்வாவை ஐக்கிய மக்கள் சக்தி நியமிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், எரான் விக்கிரமரத்னவை தேசியப் பட்டியல் ஊடாக சபைக்குக் கொண்டு வந்து, அவரை கோபா தலைவராக்குவதற்குரிய பரிசீலனைகளும் இடம்பெறுவதாகத் உட்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் ஹர்ஷ டி சில்வாவுக்கும் இடையில் மனக் கசப்புக்கள் ஏற்பட்டுள்ளன என்று அண்மைக்காலமாகத் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FVIVe6pP2puuipbGIu7f9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலால் பரவிய பதற்றம் – தேடுதல் வேட்டை!

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட...

lXCde1e0G7ygeggbmYlO4CSM1NM
இலங்கைசெய்திகள்

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு ஜாக்பாட்: ஒரே நாளில் 62 மில்லியன் ரூபாய் வருமானம்!

நத்தார் பண்டிகை மற்றும் தற்போது நடைபெற்று வரும் பாடசாலை விடுமுறைக்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி...

MediaFile 1 7
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியம் பெறுவதற்கான கால எல்லை நீடிப்பு!

‘டித்வா’ (Titli) புயல் மற்றும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியதாரர்கள்...

Nalinda Jayathissa
செய்திகள்அரசியல்இலங்கை

நிபந்தனைகளை மீறினால் அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரம் ரத்து: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை!

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில், அவற்றை மீளப்பெறும் அதிகாரம் பாடத்திற்கு பொறுப்பான...