image facbdb6c69
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஹரக் கட்டாவின் சகா கைது!

Share

நிழல் உலக தாதாவும், போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘ஹரக் கட்டாவின்’ சகாவான – ‘கதீரா’ எனப்படும் பிரபோத குமார, பொரலஸ்கமுவவில் வைத்து, விசேட அதிரடிப்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிகம பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய குறித்த நபர், ஹரக் கட்டாவின் அறிவுறுத்தலின் கீழ் குற்றத்தை நிறைவேற்றுவதற்காக பொரலஸ்கமுவவில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்ததாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் 5 ஆம் திகதி வெலிகமவில் சுட்டி மாமா என அழைக்கப்படும் நபரை சுட்டுக் கொலை செய்ய முயற்சித்த சம்பவத்திலும், மே 14 ஆம் திகதி ரொஷான் என்றழைக்கப்படும் ‘ஜக்கா’ காயமடைந்த மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திலும் சந்தேக நபர் தேடப்பட்டு வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் ஒப்பந்தக் குற்றமாக நடத்தப்பட்டதாகவும், ஹரக் கட்டாவின் வழிகாட்டுதலால் நடத்தப்பட்டதாகவும் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

இந்த சந்தேக நபர் பல பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களுக்காக தேடப்பட்டு வந்தவர். துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட 3 வகை 8 துப்பாக்கிகள், மூன்று தோட்டாக்கள் மற்றும் 17 கிராம் ஹெரோயின் போதைப் பொருளையும் STF கைப்பற்றியுள்ளது.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...