25 6846be325a66f
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் கடத்தல்காரர் ஹரக் கட்டா தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Share

போதைப்பொருள் கடத்தல்காரர் ஹரக் கட்டாவிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும், குற்றம் சாட்டப்பட்ட நதுன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் ஹரக் கட்டா தொடர்பான வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விசாரணைக்குட்படுத்தப்பட்டது.

நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நதுன் சிந்தகவிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரச சட்டத்தரணி சஜித் பண்டார தெரிவித்தார்.

அதன்படி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் பிரதிவாதியிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்வதற்கு வசதியாக உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு அரச சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரினார்.

கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் பிரதிவாதியிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்வதற்கு பயங்கரவாத விசாணைப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 11
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹபராதுவ யுவதியின் மரணம்: மின்னல் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்து என பிரேதப் பரிசோதனையில் தகவல்

காலி, ஹபராதுவ கொக்வத்தை பகுதியில் கடந்த 3-ஆம் திகதி அதிகாலை ஏற்பட்ட மின்னல் தாக்கத்தின் போது...

Untitled 10
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உயர்வு: ஒரு அவுண்ஸ் தங்கம் 4,625 டொலராகப் பதிவு

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச அரசியல் ரீதியான நிச்சயமற்ற தன்மைகள்...

Untitled 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல்கலைக்கழகப் பிரவேச விண்ணப்பம்: மே 19 வரை கால அவகாசம் நீட்டிப்பு என ஆணைக்குழு அறிவிப்பு

2025-ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தளம் கிவுல பகுதியில் மர்ம மரணம்: போதைக்கு அடிமையான குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

புத்தளம், கிவுல (Kiwula) பகுதியில் உள்ள மக்கள் நடமாட்டமற்ற சந்தியொன்றில், 41 வயதுடைய அமில சந்தருவன்...