rtjy 62 scaled
இலங்கைசெய்திகள்

இலஞ்சம் பெற்ற பொறியியலாளர் கைது

Share

இலஞ்சம் பெற்ற பொறியியலாளர் கைது

அம்பாந்தோட்டை மாவட்ட பிரதம பொறியியலாளர் மற்றும் புவியியல் மற்றும் சுரங்க பணியகத்தின் சாரதி ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒன்பது இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் முறைப்பாட்டுக்கு அமைய நேற்று (05.10.2023) ஹம்பாந்தோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.

இந்நிலையில் இது தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரையும் இன்று (06.10.2023) நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தவுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கொழும்பில் இருந்து அங்கு சென்ற இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் குழுவினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...