download 2 1 11
அரசியல்இலங்கைசெய்திகள்

சகல மக்களும் சமனென்ற மகிழ் காலம் நீடித்து நிலவட்டும்!

Share
பிறக்கும் சித்திரை புத்தாண்டின் வரவில் சகல இன மத சமூக மக்களும் சமனென்ற மகிழ் காலம் நீடித்து நிலவட்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“இன மத பேதங்கள் இன்றி, தமிழ் – சிங்கள மக்களை பண்பாட்டு விழுமியங்களால் ஒன்று பட வைத்திருப்பது சித்திரை புத்தாண்டு.
அது போலவே சகல மக்களின் இன மத உணர்வுகளும் சமனென மதிக்கப்படும் சமத்துவ தேசத்தையே நாம் விரும்புகிறோம்.
மனித நேயமே எமது மதம். எமது மக்களின் இன மத அடையாளங்களை
பாதுகாக்கவும், உரிமைகளை பெற்றிடவும் தேசிய நல்லிணக்க வழி நின்று தொடர்ந்தும் வெற்றி காண்பதே எமது மக்களுக்கு நாம் ஆற்றும் பணியாகும்.
வெற்றுக் கூச்சல்களும், வெறும் வார்த்தைகளும் எமது மக்களுக்கு
எந்த விமோசனங்களையும் பெற்றுத்தராது.
மாறாக, தீர வேண்டிய பிரச்சினைகளை தீராப் பிரச்சினையாக்கும் அரசியல் கபட நோக்கங்களே நடந்தேறும்.
மெல்லெனப் பாயும் தண்ணீர் கல்லையும் ஊடுருவிப் பாயுமென்ற எமது மதிநுட்ப வழி நின்று நாம் ஆற்றிய மாபெரும் மக்கள் பணிகளின் கண்கண்ட சாட்சியங்கள் போல், பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இலங்கைத்தீவு மீட்சி பெற நாம் எடுத்த அரசியல் நிலைப்பாடும், நிதானமும், இன்று மெல்லென வெற்றி கண்டு வருவது போல், இனிவரும் காலங்களில் எல்லா பிரச்சினைகளுக்கும் நிரந்த தீர்வுண்டு என்ற நம்பிக்கையோடு பிறந்திருக்கும் சித்திரைப்புத்தாண்டை வரவேற்போம்.
கடல் வளம், நில வளம், கல்வி வளம், மற்றும் பொருளாதார வளமென
சகல வளங்களையும் பாதுகாக்கவும்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமத்துவ நீதியை உருவாக்கவும், துயர்களும் தடைகளும் நீங்கி மகிழ்வெழுச்சியுடன் சகல உரிமைகளும் பெற்று எமது மக்கள் நிமிர்ந்தெழவும், பிறந்திருக்கும் சித்திரைப் புத்தாண்டில் இன்னமும் வலிமையுடன் உழைப்போம்” என்று அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...