Organic inputs
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பசுமை விவசாய மாதிரி வீட்டுத் தோட்டம் ஆரம்பம்!

Share

சேதன உள்ளீடுகளை ஊக்குவிக்கும் பசுமை விவசாய மாதிரி வீட்டுத் தோட்டம் இன்றையதினம் வைபவ ரீதியாக யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி – பருத்தித்துறையில் இராணுவம் மற்றும் வடமராட்சி வலய கல்வி பணிமனை இணைந்து இந்த திட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

நச்சுத் தன்மை அற்ற உணவு மற்றும் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வீட்டுத் தோட்டத்தில் நச்சுத் தன்மை அற்ற சேதனப்பசனையை பயனபடுத்துவதை ஊக்கிவித்து பசுமை விவசாயத்தின் தேசிய கொள்கைக்கு ஆதரவளித்து இப் பசுமை வீட்டுத் தோட்டத்தின் மூலம் அனைத்து சமூகங்களுக்கிடையிலும் ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Organic inputs01

வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர் க,சத்திதபாலன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், இராணுவத்தின் 55 வது படை பிரிவு தளபதி பிரிகேடியர் பிரசன்ன குணரத்தின, பருத்தித்துறை பிரதேச செயலர் ஆ.சிறி, கரவெட்டி பிரதேச செயலர் ஈ.தயாபரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி, வலய கல்வி பணிமனை அதிகாரிகள் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...