ceb 1
இலங்கைசெய்திகள்

மின்சார சபைக்கு பெரும் பொருளாதார நெருக்கடி!

Share

மின்சார சபைக்கு பெரும் பொருளாதார நெருக்கடி!

தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மின் பாவனையாளர்கள் தொடர்ச்சியாக மின் கட்டணம் செலுத்தவில்லை. இதனால் மின்சாரசபை பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது என மின்சார சபை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

அத்துடன் கட்டணத்தை செலுத்த பாவனையாளர்களை ஊக்கப்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவே இன்னும் இரண்டு அல்லது 3 மாதங்கள் சென்றால் நாம் கடுமையான பொருளாதார பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது சுமார் 44 பில்லியன் ரூபா மின்கட்டணம் அறவிடப்படவுள்ளது.

கட்டணம் செலுத்தக் கூடியவர்களும் கட்டணம் செலுத்தாமையே இந்தப் பிரச்சினைக்கு காரணம் எனவும் முடிந்தளவு மின்சாரக் கட்டணத்தை செலுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...