Dullas 666
இலங்கைசெய்திகள்

பட்டதாரிகள் விரைவில் அரச நிறுவனங்களில்!

Share

நாட்டில் பயிலுநர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகள் 53 ஆயிரம் பேரை எதிர்வரும் 3 மாதங்களுக்கு அரச நிறுவனங்களில் பணிக்கு அமர்த்துமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இவ்வாறு அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பயிலுநர்களாக இணைக்கப்பட்ட 53 ஆயிரம் பட்டதாரிகள் எதிர்வரும் மூன்று மாதங்களுள் அரச நிறுவனங்களுள் இணைக்கப்படவுள்ளனர்.

இவர்களுக்கு தற்போது வழங்கப்படும் 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவில் ஏதேனும் சிக்கல்கள் இருக்குமாயின் உரிய பகுதியின் கவனத்துக்கு கொண்டுவரலாம்.

இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கும் பொறுப்பை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோரிடம் ஜனாதிபதி ஒப்படைத்துள்ளார் – என டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 4
செய்திகள்இலங்கை

ஈரான் உச்சத் தலைவர் கமேனியின் மறைவு: கொழும்பு தூதரகத்தில் ரணில் விக்ரமசிங்க அஞ்சலி!

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) திடீர் மறைவுக்கு ஆழ்ந்த...

03 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் – வவுனியா மின்சார விநியோகத்தில் கோளாறு: நாட்டின் பல இடங்களில் மின்தடை!

புதிய அனுராதபுரம் மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளுக்கு இடையிலான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர்...

22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...