24 66fa3549a3573
இலங்கைசெய்திகள்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் தனியார் மயத்திட்டம் தொடர்பாக அநுர அரசாங்கத்தின் முடிவு

Share

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் தனியார் மயத்திட்டம் தொடர்பாக அநுர அரசாங்கத்தின் முடிவு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தனியாருக்கு விற்பதற்கான திட்டங்களை கைவிடுவதாக அறிவித்துள்ளது.

சுற்றுலாத்துறையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, தேசிய நிறுவனம் அரசுடன் இருக்கவேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார சபையின் தலைவர் பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலாக அதன் நிர்வாகத்தை மேம்படுத்த புதிய மாதிரி பரிசீலிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னைய அமைச்சரவை ஒரு தனியார் முதலீட்டாளரை ஈர்க்கும் நடவடிக்கையின் அடிப்படையில் 510 அமெரிக்க டொலர் கடன்களை எடுத்து முயற்சித்தது.

இதன்போது அரசுக்கு சொந்தமான 51 சதவீதத்தை விற்பனை செய்யவும் அரசாங்கம் முடிவு செய்திருந்தது.

Share
தொடர்புடையது
Missing Persons Nuwara Eliya
இலங்கை

நிலவும் சீரற்ற காலநிலையால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று மாலை நேர நிலவரப்படி 581 குடும்பங்களைச்...

Displaced
இலங்கை

நுவரெலியாவில் தொடரும் கனமழை – தற்காலிக முகாம்களில் தஞ்சம் கோரிய மக்கள்.

நுவரெலியாவில் சீரற்ற வானிலை காரணமாக, பல தாழ்நில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், மரங்களும் முறிந்து விழுந்துள்ளதாக...

Ministry of Defence
இலங்கை

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அவசர அறிவித்தல்.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு தொடர்புடைய அதிகாரிகளுக்கு...

Electricity bills
இலங்கை

மின்சார கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, 2026 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களில் எவ்வித...