23 19
இலங்கைசெய்திகள்

முப்படையினருக்கான புதிய நிவாரணத்திட்டத்தை அறிவித்த அரசாங்கம்

Share

முப்படையினருக்கான புதிய நிவாரணத்திட்டத்தை அறிவித்த அரசாங்கம்

இலங்கையில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் முக்கிய பிரதான வேட்பாளர்கள் அரசத்துறை மற்றும் படையினரின் நலன்கள் குறித்து தமது உறுதிமொழிகளை அறிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே அநுரகுமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி, தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் படையினருக்கான நலன் திட்டங்களை அறிவித்திருந்தது

சஜித் பிரேமதாசவும் படையினருக்கான தமது திட்டங்களை அறிவித்துள்ளார்

இந்தநிலையில், ஆயுதப்படையினருக்கான நிவாரணக் கொடுப்பனவு வழங்கும் முறைமையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது

இது வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் பிரசாரத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் அறிவித்துள்ளார்.

புதிய முறையின் கீழ் முப்படையினரின் மாதாந்த சம்பளத்துடன் நிவாரணக் கொடுப்பனவுகள் இணைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புடையினரின் நிதி நிலையை மேம்படுத்துவதற்கும், நிதி விவகாரங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதும் இந்த சீரமைப்பின் நோக்கமாக உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...