20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

Share

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று அரசாங்கம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளதாக சிவில் சமூக ஆர்வலர் நாகானந்த கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

சட்டமாா அதிபரின் ஆலோசனையின் பேரில் அமைச்சரவை செயலாளர் இந்த விடயத்தை உச்ச நீதிமன்றத்திற்கு அறிக்கை செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்தியா ஒப்பந்தத் தகவல்களை வெளியிட விரும்பாததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தகவல்களைப் பகிரங்கப்படுத்த முடியாது என்பதால், அந்தத் தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம் என்று நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், இது நாட்டின் இறையாண்மையை கடுமையாக மீறுவதாகவும், நாட்டின் நீதித்துறை கூட இந்தியாவுக்கு பணிந்து, அதன் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....

17
இலங்கைசெய்திகள்

ஹலோ மச்சான் ட்ரம்ப்! யாருக்காவது முடியுமா.. இலங்கையில் இருந்து கேள்வி

தொலைபேசி அழைப்பை எடுத்து ஹலோ மச்சான் ட்ரம்ப் என்று யாருக்காவது கதைக்க முடியுமா, அப்படி யாராது...