24 66e5113787147
இலங்கைசெய்திகள்

எமது ஆட்சியில் சிங்கள அரசாங்கமல்லாது இலங்கை அரசாங்கம் அமைக்கப்படும் : தேசிய மக்கள் சக்தி

Share

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றவுடன், பரந்த இலங்கை அரசியல் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியும் என தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சமரசிங்க, வடக்கு மற்றும் கிழக்கின் முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்கள் மற்றும் பெருந்தோட்டத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் இந்த இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தமது கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“நாங்கள் இலங்கை அரசாங்கத்தை உருவாக்க விரும்புகிறோம். சிங்கள அரசாங்கத்தை அல்ல” என்று சமரசிங்க கூறினார்.

இதன்படி வரலாற்றில் முதல் தடவையாக, அரசாங்கத்தில் அங்கம் பெறாத நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சரவையில் நியமிக்கப்படுவர் என்று வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உள்ள 222 உறுப்பினர்களில் வடக்கு, கிழக்கு மற்றும் தோட்டத் துறைகளைச் சேர்ந்த நல்ல நாடாமன்ற உறுப்பினர்கள் உள்ளதாகவும், இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு அவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் சமரசிங்க தெரிவித்தார்.

ஆரம்பத்தில் தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரவையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார உட்பட நான்கு பேர் இருப்பார்கள்.

விவாதங்களுக்குப் பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், அமைச்சரவை ஏழு அல்லது எட்டு உறுப்பினர்களாக விரிவாக்கப்படலாம்.

ஒரே நேரத்தில் சரியாக 25 உறுப்பினர்களை நியமிக்க கடுமையான தேவைகள் எதுவும் இல்லை என்றும் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...