24 668aae2e0fddd 6
இலங்கைசெய்திகள்

மக்களுக்கு பேரிடி: நாளை முதல் இடைநிறுத்தப்படும் அரச சேவைகள்

Share

மக்களுக்கு பேரிடி: நாளை முதல் இடைநிறுத்தப்படும் அரச சேவைகள்

சுகவீன விடுமுறையில் நாளை (08) மற்றும் நாளை மறுதினம் (09) பணிக்கு சமூகமளிப்பதில்லை என 200 இற்கும் மேற்பட்ட அரச சேவை சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

அவற்றில் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் நில அளவை தொழிற்சங்கங்களும் அடங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, எதிர்வரும் ஜூலை மாதம் 09ஆம் திகதி சுகவீன விடுமுறையில் பணிக்கு வருவதில்லை என அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களும் தீர்மானித்துள்ளன.

இதேவேளை, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (7) நள்ளிரவு முதல் நாளை (9) நள்ளிரவு வரை 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க தபால் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இதன் போது, இன்று (07) மாலை 4.00 மணி முதல் மத்திய தபால் பரிவர்த்தனையிலும், இன்று நள்ளிரவு முதல் அனைத்து தபால் நிலையங்களிலும் அடையாள வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...

bus deesel
இலங்கை

டீசல் இல்லாமல் இயக்கப்படும் பேருந்துகள் !

மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக இயக்கப்படும் பேருந்துகள் மீது காவல்துறை நாடு தழுவிய அளவில் தீவிர நடவடிக்கைகளைத்...

canada job
இலங்கை

கனடா மோகம் – பறிபோன எட்டு மில்லியன் ரூபா.

யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியை சேர்ந்த ஐவரிடம் கனடா – லக்சம்பர்க் நாடுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத்...

police team
இலங்கை

துரிதமாக இடம்பெறும் இரண்டு தனி காவல்துறையினரின் விசாரணை.

மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவும், மாலபே பொலிஸாரும் இணைந்து, முன்னாள் பொலிஸ் மா அதிபர்...