அலி சப்ரி
இலங்கைசெய்திகள்

கைதிகளின் பாதுகாப்புக்கு அரசே பொறுப்பு! – நீதியமைச்சர்

Share

சிறைகளில் உள்ள கைதிகளின் உயிர்களுக்கு ஏதேனும் நடந்தால் அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். அவர்களுக்கு எந்தவிதத்திலும் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கவில்லை.

மாறாக அவர்களின் உறவினர்களை சந்திக்க யாழ்ப்பாணம் சிறைக்கு தம்மை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையே முன்வைத்தனர்.

இவ்வாறு நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கைதிகளின் நலன், பாதுகாப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் எம்.பி. கேள்வி எழுப்பியிருந்தார். சிறைக்கைதிகளை யாழ்ப்பாணம் சிறைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக் கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளிக்கும்போதே நீதியமைச்சர் அலி சப்ரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் சிறையில் தமிழ் கைதிகளுக்கு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் விசாரணைகளை நடத்தி உரிய தீர்வு வழங்குவதே எமது அமைச்சின் வேலைத்திட்டமாகும்.

குற்றம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன் சிறைச்சாலை சென்று குறித்த கைதிகளுடன் உரையாடினேன்.

அதன்போது தாம் யாழ்ப்பாணத்திற்கு செல்ல வேண்டும் என அவர்கள் என்னிடம் கூறினார்கள். மாறாக உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக அவர்கள் என்னிடம் கூறவில்லை. நான் தமிழ் மொழியில் அவர்களுடன் கலந்துரையாடினேன்.

எவ்வாறு இருப்பினும் அவர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்த நாம் தயாராக உள்ளோம். ஆகவே அவர்களுக்கு எது நடந்தாலும் அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று நீதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...