CV Vigneshwaran 67897898
இலங்கைசெய்திகள்

லொஹான் விவகாரத்தில் அரசு கண்துடைப்பு நாடகம்! – விக்னேஸ்வரன் காட்டம்

Share

லொஹான் விவகாரத்தில் அரசு கண்துடைப்பு நாடகம்! – விக்னேஸ்வரன் காட்டம்

லொஹான் ரத்வத்த அநுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுத்த கொலைமிரட்டல் அச்சுறுத்தல் தொடர்பில் அரசின் செயற்பாடானது கண்துடைப்பு நாடகமே.  உண்மையில் குற்றம் புரிபவர்களுக்கு தண்டனை கிடைக்கப் போவதில்லை.

இதனை யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் குற்றங்கள் புரிபவர்களுக்கு தண்டனை கிடைக்கப்போவதில்லை. அவர்கள் மிகக் கேவலமான குற்றங்களைப் புரிந்துவிட்டு தமது பதவியை இராஜினாமா செய்து எதுவும் நடக்காதது போல சுதந்திரமாக சுற்றி திரிவர்.

ஹெலிகொப்டர் மூலம் கடந்த 12 ஆம் திகதி அநுனநராதபுரம் சிறைக்கு பயணம் செய்து நன்றாக குடித்துவிட்டு சிறைக் கைதிகளை சிறைக் கூண்டுக்கு வெளியே வரச் சொல்லி அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் லொஹான் ரத்வத்த. சிறைக் கைதிகளை வெளியே அழைத்து எந்தத் தீங்கும் விளைவிக்கலாம் என்றாகிவிட்டது.

இது தமிழ் மக்களை இழிவுபடுத்தும் செயற்பாடாகும். பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் இடையே பிளவு ஏற்படுத்தும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. லொஹான் ரத்வத்த உடன் கைது செய்யப்பட வேண்டும் உடனே சம்பந்தப்பட்ட சி.சி.ரி.வி காணொலி காட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

லொஹான் கைதுசெய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டாலும் விசாரணைகளின் போது தமிழ் அரசியல் கைதிகள் சாட்சிகளாக உண்மை கூறினாலும் அவர்களின் சாட்சியம் பக்கச் சார்புடையது எனத் தெரிவித்து அவரை விடுதலை செய்யும் வாய்ப்புக்களும் அதிகம் உள்ளன என அவரது யறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...