tamilni 28 scaled
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் 180 நாட்கள் பணியாற்றியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Share

உள்ளூராட்சி மன்றங்களில் 180 நாட்கள் பணியாற்றியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

உள்ளூராட்சி மன்றங்களில் 180 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக பணியாற்றிய தற்காலிக, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களை நிரந்தரமாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அமைச்சரவையில் மகஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

கடந்த ஆண்டு (2023) ஆகஸ்ட் 29 ஆம் திகதி 8435 பேர் 180 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக வேலை செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனவரி 18 அன்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர், நிதி, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் ஆகியவற்றின் இராஜாங்க அமைச்சர் மற்றும் அதன் செயலாளர் ஆகியோருக்கிடையில் அந்த ஊழியர்களுக்கு தொழில் பாதுகாப்பை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதற்கமைய, உள்ளூராட்சி மன்றங்களில் வீதிப் பராமரிப்பு, குப்பை அகற்றல், நூலகச் சேவை, அலுவலக உதவிச் செயற்பாடுகள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள் சேவைகளை தொடர்ந்தும் பேணுவது அவசியமானதனால் அவர்களுக்கு நிரந்தர சேவை வழங்குவது நியாயமானது என அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், இந்த நியமனம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், பொதுக் கருவூலத்தின் சுமையை குறிப்பிட்ட அளவிற்கு அதிகாரிகள் தாங்கும் திறன் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 117 உள்ளூராட்சி சபைகளைச் சேர்ந்த 6678 ஊழியர்களுக்கு சபை நிதியிலிருந்து சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளின் அடிப்படையிலும், 159 குறைந்த வருமானம் பெறும் சபைகளில் 1757 ஊழியர்களுக்கு மத்திய திறைசேரியின் அடிப்படையிலும் நிரந்தர சேவை வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதியை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...