இலங்கைசெய்திகள்

அநுர அரசாங்கத்தில் கனவாகிவிட்ட அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு

Share
4 42
Share

அநுர அரசாங்கத்தில் கனவாகிவிட்ட அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு

அநுர அரசாங்கத்தில் கனவாகிவிட்ட அரச ஊழியர்களின் சம்பள அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டிருந்தார். எனினும், தற்போதைய அரசாங்கம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சம்பளத்தை உயர்த்துவதாக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் இன்று அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு என்பது கனவாகிவிட்டது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.

 

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

 

சந்தையில் பொருட்களின் விலையேற்றத்தினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர், தற்போதைய அரசாங்கம் அதனை கட்டுப்படுத்த தவறியுள்ளது. வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்ற முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது.

 

சந்தையில் அரிசி, தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை வேகமாக அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

 

தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்தாலும், தற்போது மக்கள் தவறிழைத்து விட்டதாக உணர்கிறார்கள்.

 

தேசிய மக்கள் சக்தி தேர்தலின் போது ஆட்சிக்கு வர எத்தனை வாக்குறுதிகளை அளித்தாலும் இன்று நிறைவேற்ற முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...