இலங்கைசெய்திகள்

சம்பள அதிகரிப்பு உறுதி! அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதியின் செய்தி

8 13
Share

சம்பள அதிகரிப்பு உறுதி! அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதியின் செய்தி

அரச ஊழியர்களின் சம்பளம் நிச்சயமாக அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்காப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட அரசாங்கம் ஒன்றே எமக்குக் கிடைக்கப்பெற்றது.

நாம் கட்டுப்பட வேண்டிய பல விடயங்களை சர்வதேச நாணய நிதியம் எமக்கு வழங்கியுள்ளது. 2025ஆம் ஆண்டு எமது தேசிய வருமானம் மொத்த தேசிய உற்பத்தியில் 15வீதமாக அமைய வேண்டும் என்பது அதில் ஒன்றாகும்.

இவ்வாறு பல சிக்கல் நிலைகள் காணப்படுகின்றன. ஒன்று நாங்கள் அந்த நிகழ்ச்சித் திட்டத்தில் இருந்து வெளியில் வர வேண்டும். அல்லது அந்த ஒப்பந்தத்திற்குள் இருந்து கொண்டே சிறந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

எமது நாட்டின் தற்போதைய பொருளாதார இயலுமையை பொறுத்தமட்டில், நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் இருந்து வெளியில் வர முடியாது.

நிச்சயமாக உழைக்கும் போது செலுத்தவேண்டிய வரி தொடர்பான சிறந்த திட்டம் எம்மிடம் உள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அந்த நிவாரணம் மக்களுக்கு கிடைக்கும்.

அத்துடன், அரச ஊழியர்களின் சம்பளமும் நிச்சயமாக அதிகரிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...