16 2
இலங்கைசெய்திகள்

மதத்தலங்கள் தொடர்பில் வெளியான தகவலை மறுக்கும் அரசாங்கம்

Share

மதத்தலங்கள் தொடர்பில் வெளியான தகவலை மறுக்கும் அரசாங்கம்

நாடு முழுவதும் உள்ள கோயில்கள் மற்றும் பிற மதத் தலங்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல்களை அரசாங்கம் மறுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, குறித்த மதத்தலங்களின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்ட இராணுவ வீரர்களை திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் தவறானவை என்று அரசாங்கம் கூறியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகத்தினால் அத்தகைய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன் இந்த கூற்றுக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக, முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக கூறப்பட்ட செய்திகளையும் அரசாங்கம் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...