16 2
இலங்கைசெய்திகள்

மதத்தலங்கள் தொடர்பில் வெளியான தகவலை மறுக்கும் அரசாங்கம்

Share

மதத்தலங்கள் தொடர்பில் வெளியான தகவலை மறுக்கும் அரசாங்கம்

நாடு முழுவதும் உள்ள கோயில்கள் மற்றும் பிற மதத் தலங்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல்களை அரசாங்கம் மறுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, குறித்த மதத்தலங்களின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்ட இராணுவ வீரர்களை திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் தவறானவை என்று அரசாங்கம் கூறியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகத்தினால் அத்தகைய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன் இந்த கூற்றுக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக, முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக கூறப்பட்ட செய்திகளையும் அரசாங்கம் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Namal Rajapaksa 03
இலங்கை

நாமல் ராஜபக்சவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகள்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பணச்சலவை தடுப்புச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையினை...

IGP C. D. Wickramaratne
இலங்கை

சி.டி. விக்கிரமரத்னவின் 16 ஆண்டு கால மெய்ப்பாதுகாவலர் வழங்கிய சாட்சியம்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான நீதவான்...

Missing Persons 1
இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எந்த நீதியும் கிடைக்கவில்லை – விஜயகுமார்.

வடக்குக் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் அனுபவம் மிக்கவர்கள்...

அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....