7 42
இலங்கைசெய்திகள்

ஐ.எம்.எப் நிபந்தனைகளின் தொடர்ச்சி ரணிலின் கட்டளையா! சபையில் ஜனாதிபதியிடம் கேள்வி

Share

ஐ.எம்.எப் நிபந்தனைகளின் தொடர்ச்சி ரணிலின் கட்டளையா! சபையில் ஜனாதிபதியிடம் கேள்வி

சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்றுக்கொண்ட நிபந்தனைகள் எதனையும் அரசாங்கம் திருத்தம் செய்யவில்லை. பயமா அல்லது தெரியாதா அல்லது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கட்டளையா என்பது தெரியவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (19) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,”அரசாங்கம் சிறந்த முறையில் செயற்படும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். இருப்பினும், இந்த அரசாங்கமும் கடந்த காலங்களை போன்றே செயற்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்து பரிந்துரைகளும் சிறந்தது என்று நாங்கள் குறிப்பிடவில்லை. நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய செய்யும் தேவை நாணய நிதியத்துக்கு கிடையாது.

நாணய நிதியத்தின் நிபந்தனைகளுடன் முன்னேற்றமடைந்த நாடுகளும் உள்ளன, வீழ்ச்சியடைந்த நாடுகளும் உள்ளன. ஆகவே, நாணய நிதியத்தின் வழிகாட்டலுடன் எமக்கான பொருளாதார திட்டங்களை நாமே வகுத்துக்கொள்ள வேண்டும்.

2025ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டம் மக்களுக்கானது என்று குறிப்பிடப்படுகிறது. உண்மையில் இதனை மக்களை ஏமாற்றும் வரவு செலவுத் திட்டம் என்றே குறிப்பிட வேண்டும். மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். மக்களிடம் உண்மையை குறிப்பிடுங்கள்.

அரச சேவையாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு 345 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 15 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ஆனால், எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 5900 ரூபாவே கிடைக்கப்பெறும்.

அரச சேவையில் சுமார் 14 இலட்சம் உத்தியோகத்தர்கள் உள்ளார்கள். அவர்களில் 51 சதவீதமானோர் கீழ் நிலை உத்தியோகத்தர்களாவர். மறுபுறம் தனியார் துறையில் 60 இலட்சம் பேர் உள்ளார்கள். இவர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த வரவு – செலவுத் திட்டத்தில் நடைமுறைக்கு சாத்தியமான திட்டங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

மேலும்,மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வும் முன்வைக்கப்படவில்லை. அரிசி மற்றும் தேங்காய் மாபியாக்களை தோற்கடிப்பதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.”என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
02 15
செய்திகள்உலகம்

எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த மேலதிக கப்பல்கள் வருகை: பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு,...

01 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் இன்று சில பகுதிகளில் மழை மற்றும் பனிமூட்டமான வானிலை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இன்றைய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப்...

29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....