8 41
இலங்கைசெய்திகள்

யாழில் விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம் – அமைச்சரின் அறிவிப்பு

Share

யாழில் விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம் – அமைச்சரின் அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் (Jaffna) புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அலுவலகம் விரைவில் திறக்கப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.

புதிய பணிமனையை திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி அடைந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் (Department of Immigration and Emigration) செயற்பாடுகள் இன்று முதல் 24 மணி நேரமும் இடம்பெறும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்காக கொழும்பு (Colombo) கோட்டை – பத்திர முல்லை வரை இ. போ. ச. இரவு நேர பேருந்து சேவையும் நடத்தப்படுகிறது.

இதன்போது, கடவுச்சீட்டுக்கான அவசர தேவை கொண்டவர்கள் மாத்திரம் பணிமனைக்கு வருகை தந்து பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், தற்போது போதுமான கடவுச்சீட்டுகள் கையிருப்பில் உள்ளமையால் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...