12 2
இலங்கைசெய்திகள்

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டை மீறி உள்ளது

Share

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டை மீறி உள்ளது

தற்போதைய அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டை மீறி செயல்பட்டுள்ளது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர(Kanchana Wijesekara) இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

எரிவாயு விலை சூத்திரத்திற்கு அமைவாக விலை மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இதன்படி உலக சந்தையில் அதிகரித்துள்ள எரிவாயு விலையின் தொகைக்கு நிகரான அடிப்படையில் இலங்கையில் எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இதனால் லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தனது விநியோகத்தை வரையறுத்துக் கொண்டுள்ளதாகவும் இதனால் எதிர்காலத்தில் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

லிற்றோ எரிவாயு நிறுவனமும் தற்போது சர்வதேச நாணய நிதியத்திடம் அளிக்கப்பட்ட உறுதி மொழிகளை மீறி எரிவாயு விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலைமைகளினால் சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாம் மீளாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் நவம்பர் மாதம் மூன்றாவது கடன் தொகையை பெற்றுக் கொள்வதற்கு திட்டமிட்டு இருந்தபோதிலும் தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால், கடன் பெற்றுக் கொள்வதற்கு காலம் தாழ்த்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...

eb shok
இலங்கை

மின்சாரம் தாக்கியதில் ஒன்பது மாத குழந்தையின் தாய் பலி.

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி பகுதியில் கிணற்றில் வீழ்ந்த கோழிக்குஞ்சை மீட்க முற்பட்ட தினேஷ் நேசமலர்...

wether
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நாடு முழுவதும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

இலங்கையினை பொறுத்தவரை இன்று பகல் வேளையில் மனித உடலினால் உணரக்கூடிய எச்சரிக்கை மட்டத்தில் அதிகரித்த வெப்பநிலை...

Pastor Jerome
இலங்கை

அநுரவை புகழ்ந்த சர்ச்சையில் சிக்கிய போதகர்.

மிராக்கல் டோம் தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வொன்றின் போது, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்த, ஜெரோம் பெர்னாண்டோ...