” முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கை வருவதற்கான முழு சுதந்திரம், உரிமை உள்ளது. அந்தவகையில் அவர் விரைவில் நாடு திரும்புவார்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
” முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. தனது நாட்டுக்கு வரும் உரிமை கோட்டாபய ராஜபக்சவுக்கு இருக்கின்றது.
அதேவேளை, போராட்டம் என்ற போர்வையில் இடம் பெற்ற சில வன்முறைச்சம்பவங்களை அனுமதிக்க முடியாது. அத்தகையவர்களுக்கு எதிராக நடவடிக்கை அவசியம்.
அதேபோல ஊழல்கள் மற்றும் தவறான செயற்பாடுகளில் ஈடுபடும் அரசியல் வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் பெயர்களை ஊடகங்கள் பகிரங்கமாக வெளியிட வேண்டும். அவ்வாறு அல்லாமல் அரசியல்வாதி, அரச அதிகாரி என பொதுவாக விளித்தால் அது அனைவருக்கும் களங்கமாக அமையும்.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.
#SriLankaNews
Leave a comment