Gotabaya Rajapaksa
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாபயவுக்கு முழு சுதந்திரம் உண்டு!

Share

” முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கை வருவதற்கான முழு சுதந்திரம், உரிமை உள்ளது. அந்தவகையில் அவர் விரைவில் நாடு திரும்புவார்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. தனது நாட்டுக்கு வரும் உரிமை கோட்டாபய ராஜபக்சவுக்கு இருக்கின்றது.

அதேவேளை, போராட்டம் என்ற போர்வையில் இடம் பெற்ற சில வன்முறைச்சம்பவங்களை அனுமதிக்க முடியாது. அத்தகையவர்களுக்கு எதிராக நடவடிக்கை அவசியம்.

அதேபோல ஊழல்கள் மற்றும் தவறான செயற்பாடுகளில் ஈடுபடும் அரசியல் வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் பெயர்களை ஊடகங்கள் பகிரங்கமாக வெளியிட வேண்டும். அவ்வாறு அல்லாமல் அரசியல்வாதி, அரச அதிகாரி என பொதுவாக விளித்தால் அது அனைவருக்கும் களங்கமாக அமையும்.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....