tamilni 267 scaled
இலங்கைசெய்திகள்

கோட்டாபயவை கடுமையாக சாடிய தேரர்

Share

கோட்டாபயவை கடுமையாக சாடிய தேரர்

உயிரச்சுறுத்தல் ஏற்பட்ட போது நாட்டை விட்டு வெளியேறுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நான் முன்னிலையாகியதை கோட்டாபய ராஜபக்ச மறந்து விட கூடாது என தேசிய பேரவை அமைப்பின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,”கோட்டாபய வெளியிட்டுள்ள புத்தகத்தில் அவரது சிங்கள பௌத்த இருப்பை இல்லாதொழிக்க நான் முன்னிலையில் இருந்து செயற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கோட்டாபயவின் தவறான தீர்மானங்கள் மற்றும் செயற்பாடுகள் என்பனவற்றால் தான் அவரது சிங்கள பௌத்த உறுதிப்பாடு இல்லாமல் போனது.

அரகலயவின் போது கோட்டாபய தனது உயிரை பாதுகாத்துக் கொள்ள நாட்டை விட்டு வெளியேறும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவர் நாட்டை விட்டுச் வெளியேறுவதற்கு நான் முன்னிலையில் இருந்து செயற்பட்டேன் என்பதை அவரது பிரத்தியேக பணியாளர்கள் நன்கு அறிவார்கள்.

கோட்டாபயவுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.அவரது முறையற்ற நிர்வாகத்துக்கே எதிர்ப்பு தெரிவித்தோம்.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய கோட்டாபய சிங்கள பௌத்த கொள்கைகளை மீண்டும் தீவிரப்படுத்த முயற்சிக்கிறார். நாட்டு மக்கள் மிக தெளிவாக உள்ளார்கள். ஆகவே புத்தகம் எழுதுவது பயனற்றது.

தன்னை தெரிவு செய்த மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாதற்கு கோட்டாபய அந்த புத்தகத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். உண்மையில் பொருளாதார நெருக்கடிக்கு கோட்டபய வாக்குமூலம் வழங்க வேண்டும்.”என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...