gota mahinda
அரசியல்இலங்கைசெய்திகள்

முடிவு ஜனாதிபதியிடம்; எதற்கும் பிரதமர் தயார்! – கோட்டாவுக்கு மஹிந்தர் செய்தி

Share

“பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி என்ற முறையில் உங்களுக்கு உசிதமானது என நீங்கள் கருதும் எந்தத் தீர்மானத்தையும் எடுங்கள். அதனை ஏற்றுக்கொள்ள நான் தயார்” என தம்பியார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குத் தமையனார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

பிரதமர் தனது நிலைப்பாட்டை இன்று காலை ஜனாதிபதியிடம் தெரிவித்தார் என பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

இதன்போதே பிரதமர் மேற்படி விடயத்தை ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தினார் எனப் பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டார்.

சர்வகட்சி இடைக்கால அரசை நியமிப்பதற்காகப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இராஜிநாமா செய்யுமாறு கோரிய மகாநாயக்க தேரர்களின் யோசனையை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு பெளத்த பிக்குகளின் சங்க சபா நேற்று கொழும்பில் வைத்து கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

அதையடுத்தே இந்தத் தகவலை ஜனாதிபதிக்குப் பிரதமர் தெரிவித்திருக்கின்றார் எனக் கூறப்படுகின்றது.

– ‘காலைக்கதிர்’ (01.05.2022 – மாலைப் பதிப்பு)

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...