gotta
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடு திரும்ப மறுக்கும் கோட்டா! – சிங்கப்பூர் விசா மேலும் நீடிப்பு

Share

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேலும் இரண்டு வாரங்கள் சிங்கப்பூரில் தங்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜூலை மாதம் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை பதவிவிலகக் கோரி நாட்டில் மாபெரும் மக்கள் போராட்டம் வெடித்தது.

இந்தநிலையில், ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறி நாட்டில் தலைமறைவாகவிருந்த கோட்டாபய ராஜபக்ச கடந்த 13 ஆம் திகதி மாலைதீவுக்கு தப்பிச் சென்றார்.

மாலைதீவு சென்ற அவருக்கு அங்கும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார்.

சாதாரண நபருக்கு வழங்கப்பட்டுள்ள 14 நாட்களுக்கான விசாவே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் அவருக்கு சலுகைகள் எவையும் வழங்கப்படவில்லை எனவும் சிங்கப்பூர் அரசு தெரிவித்தது.

இதன்படி கடந்த 28ஆம் திகதி குறித்த விசா முடிவடையும் நிலையில், அவருக்கு மீண்டும் 14 நாட்கள் தங்கியிருப்பதற்கான விசா சிங்கப்பூர் அரசால் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், எதிர்வரும் 13ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் சிங்கப்பூரில் தங்குவதற்கு மேலும் 14 நாட்கள் விசாவை நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கோரிக்கை இலங்கை அரசால் முன்வைக்கப்பட்டுள்ளது எனவும், இந்த கோரிக்கைக்கு இணங்க அவருக்கு விசா நீடிக்கப்படவுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோட்டபாய ராஜபக்ச இலங்கை திரும்புவதற்கு சரியான தருணம் இதுவல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...