IMG 20220602 WA0008
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கோட்டா – ரணில் அரசுக்கு எதிராக ஜே.வி.பி. பிரசாரம்!

Share

“நாட்டைக் குட்டிச் சுவராக்கிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசும் வேண்டாம்; மக்களால் நிராகரிக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்சவின் நிர்வாகமும் வேண்டாம் என மக்கள் சார்பாக கோரிக்கை விடுகின்றேன்” என்று மக்கள் விடுதலை முன்னணி மட்டக்களப்பில் தெருத் தெருவாகப் பிரசாரம் செய்து வருகின்றது.

ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியும், ஜே.வி.பியின் பிரச்சாரகர்களும், அதன் ஏறாவூர் அமைப்பாளர் புஹாரி தலைமையிலான அணியினரும் ஏறாவூர் நகர கடைத் தெருக்களில் மக்களை விழிப்புணர்வூட்டும் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

தெருக்களில் கால்நடையாகச் சென்ற இக்குழுவினர் “வனப்புமிக்க தேசம் அழகான வாழ்க்கை மற்றும் அன்பு மிக்க மக்களே” என விளிக்கும் இரு கையேடுகளை மக்களுக்கு விநியோகித்தனர்.

அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி,

“கோட்டா மற்றும் ரணில் தலைமையிலான நிர்வாகத்தால் இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கும் பிரச்சினைகளை ஒருபோதும் தீர்த்துவிட முடியாது. அதனால் இவர்கள் ஒதுங்கிக்கொண்டு மக்களாட்சியை நிறுவதற்கு இடம்கொடுக்க வேண்டும். மக்களால் விரும்பப்பட்ட தலைவர்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்பதே மக்கள் சார்பாக எமது கோரிக்கையாகும்.

இவர்கள் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் வரை இந்த நாட்டுக்கு விமோசனம் இருக்காது. கொள்ளையடிக்கின்ற அரசுக்கு உதவி அளிக்க சர்வதேச நாடுகள் மற்றும் முதலீட்டாளர்கள் முன்வர வாய்ப்பில்லை.

இவர்கள் மக்களால் வெறுக்கப்பட்ட மக்கள் நிராகரித்த தலைவர்கள். இவர்களால் மக்கள் தொடர்ந்தும் வதைப்பட முடியாது.

கோட்டா ஆட்சிக்கு வரும்போது பருப்பு ஒரு கிலோ 65 ரூபா; இப்போது 535 ரூபா. தேங்காய் எண்ணெய் ஒரு போத்தல் 160 ரூபா; இப்போது 800 ரூபா. அன்று சீமெந்து ஒரு பைக்கற் 850 ரூபா; இப்போது 3,200 ரூபா. சமையல் எரிவாயு அன்று 1,400 ரூபா; இப்போது 5,200 ரூபா. பாண் ஒரு இறாத்தல் 50 ரூபா; இப்போது 160 ரூபா.

விலைகளே அதிகரித்திருக்கின்றன. ஆனால், சம்பளம் அன்று கோட்டா இருக்கும்போது கிடைத்த அதே சம்பளமும் அதை விடக் குறைந்த வருமானமுமே மக்களுக்கு கிடைக்கின்றது. எனவே, இந்த நிலைமையை மாற்ற வேண்டும். இதற்காக்க மக்கள் அனைவரும் அணிதிரளுங்கள்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...