sajith team 1000x600 1
அரசியல்அரசியல்இலங்கைகட்டுரைசெய்திகள்

தென்னிலங்கை மே தின கூட்டங்களை ஆக்கிரமித்த ‘கோட்டா கோ ஹோம்’ கோஷம்!

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்களான அரசும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதை பிரதானமாக வலியுறுத்தியே தெற்கு அரசியல் களத்தில், எதிரணிகளின் மே தின பேரணிகளும், கூட்டங்களும் இடம்பெற்றன.

ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டத்தில், அரசிலிருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகள்மீது சரமாரியாக விமர்சனக் கணைகள் தொடுக்கப்பட்டன. அத்துடன், மஹிந்த ராஜபக்ச இல்லாத இடைக்கால அரசை ஏற்கமுடியாதெனவும் மொட்டு கட்சி திட்டவட்டமாக அறிவித்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பு, சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அகட்சியின் பிரமுகர்கள், ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். ஜனாதிபதி தலைமையிலான சர்வக்கட்சி இடைக்கால அரசில் ஐக்கிய மக்கள் சக்தி இணையாது எனவும் இடித்துரைத்தனர்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதான மே தின பேரணியும், கூட்டமும் கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் பொலன்னறுவை மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, புதிய அரசை அமைப்பதற்கான போராட்டம் தொடரும் என அறிவித்தார். கட்சி தலைமையகத்திலும் மே தனி நிகழ்வுகள் இடம்பெற்றன.

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பியின் மே தின நிகழ்வுகள் நான்கு மாவட்டங்களை மையப்படுத்தியமாக அமைந்தது. கொழும்பில் நடைபெற்ற பிரதான கூட்டத்தில் உரையாற்றிய கட்சித் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் ஜே.வி.பி. தலைமையிலான ஆட்சியின் முக்கியத்துவத்தை பட்டியலிட்டார்.

11 கட்சிகளில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் தனியே மே தின கூட்டத்தை நடத்தின. விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியும் பத்தரமுல்லையில் தனி நிகழ்வை நடத்தியது.

ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இம்முறை மேதின கூட்டத்தையும், பேரணியையும் நடத்தவில்லை. எனினும், மொட்டு கட்சிசார்பு தொழிற்சங்கத்தால் மே தின கூட்டமொன்று நுகேகொடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனினும், வாழ்த்து செய்திகளை அனுப்பி வைத்திருந்தனர்.

கூட்டத்தில் உரையாற்றிய மொட்டு கட்சி உறுப்பினர்கள், அரசு பதவி விலகாது எனவும், மஹிந்த இல்லாத சர்வக்கட்சி இடைக்கால அரசை ஏற்கமுடியாது எனவும் திட்டவட்டமாக அறிவித்தனர். காலி முகத்திடல் போராட்டக்காரர்களாலும் மே தின நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

#SriLankaNews #Artical

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...

harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து...

1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...

Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற...