sajith team 1000x600 1
அரசியல்அரசியல்இலங்கைகட்டுரைசெய்திகள்

தென்னிலங்கை மே தின கூட்டங்களை ஆக்கிரமித்த ‘கோட்டா கோ ஹோம்’ கோஷம்!

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்களான அரசும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதை பிரதானமாக வலியுறுத்தியே தெற்கு அரசியல் களத்தில், எதிரணிகளின் மே தின பேரணிகளும், கூட்டங்களும் இடம்பெற்றன.

ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டத்தில், அரசிலிருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகள்மீது சரமாரியாக விமர்சனக் கணைகள் தொடுக்கப்பட்டன. அத்துடன், மஹிந்த ராஜபக்ச இல்லாத இடைக்கால அரசை ஏற்கமுடியாதெனவும் மொட்டு கட்சி திட்டவட்டமாக அறிவித்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பு, சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அகட்சியின் பிரமுகர்கள், ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். ஜனாதிபதி தலைமையிலான சர்வக்கட்சி இடைக்கால அரசில் ஐக்கிய மக்கள் சக்தி இணையாது எனவும் இடித்துரைத்தனர்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதான மே தின பேரணியும், கூட்டமும் கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் பொலன்னறுவை மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, புதிய அரசை அமைப்பதற்கான போராட்டம் தொடரும் என அறிவித்தார். கட்சி தலைமையகத்திலும் மே தனி நிகழ்வுகள் இடம்பெற்றன.

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பியின் மே தின நிகழ்வுகள் நான்கு மாவட்டங்களை மையப்படுத்தியமாக அமைந்தது. கொழும்பில் நடைபெற்ற பிரதான கூட்டத்தில் உரையாற்றிய கட்சித் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் ஜே.வி.பி. தலைமையிலான ஆட்சியின் முக்கியத்துவத்தை பட்டியலிட்டார்.

11 கட்சிகளில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் தனியே மே தின கூட்டத்தை நடத்தின. விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியும் பத்தரமுல்லையில் தனி நிகழ்வை நடத்தியது.

ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இம்முறை மேதின கூட்டத்தையும், பேரணியையும் நடத்தவில்லை. எனினும், மொட்டு கட்சிசார்பு தொழிற்சங்கத்தால் மே தின கூட்டமொன்று நுகேகொடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனினும், வாழ்த்து செய்திகளை அனுப்பி வைத்திருந்தனர்.

கூட்டத்தில் உரையாற்றிய மொட்டு கட்சி உறுப்பினர்கள், அரசு பதவி விலகாது எனவும், மஹிந்த இல்லாத சர்வக்கட்சி இடைக்கால அரசை ஏற்கமுடியாது எனவும் திட்டவட்டமாக அறிவித்தனர். காலி முகத்திடல் போராட்டக்காரர்களாலும் மே தின நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

#SriLankaNews #Artical

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...