செய்திகள்இலங்கை

சலுகை விலையில் பொருட்கள்:வர்த்தக அமைச்சர் தெரிவிப்பு

fdfcs
Share

நேற்று முதல் சதொச ஊடாக குறைந்த விலையில் பெற முடியும் என அமைச்சர் பந்துல தெரிவிதார்

1998 எனும் தொலைபேசி இலக்கம் மூலம் அழைத்தால் வீடுகளுக்கே விநியோகம் செய்யப்படும்

10 kg சுப்பர் சம்பா , 01 kg வெள்ளை சீனி , 01 kg பருப்பு, 01 kg இடியப்ப மா ,500 g நெத்தலி , 400 g நூடில்ஸ் உட்பட பல பொருட்கள்

லங்கா சதொச ஊடாக சலுகை விலையில்  பொதியை வழங்கும் நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டதாக தெரிவித்த வர்த்தக அமைச்சர் பந்துல ,

20 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய இந்த பொதியை 3998 ரூபாவிற்கு சதொசவில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இந்தப் பொதியை ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

அதன்படி 10 kg சுப்பர் சம்பா, 1 kg வெள்ளைச்சீனி, 1 kg பருப்பு, 1 kg இடியப்ப மா, 500 g நெத்தலி, 400 g நூடில்ஸ்,400 g உப்பு, 2 தேங்காய்ப்பால் பக்கெற் (330 ml.), 100 g மிளகாய்த் தூள், 100 g மஞ்சள் தூள், 100 g தேயிலை, 80 கிராம் பொடி லோஷன், 100 g சதொச சந்தன சவர்க்காரம், 100 ml. கை கழுவும் திரவம், 90 g சோயா மீற், சதொச TFM சலவை சவர்க்காரம் என்பன இப்பொதியில் அடங்கியிருக்கும்.

இதன் மூலம் நுகர்வோர் 1750 ரூபா நிவாரணத்தைப் பெற முடியும் என அமைச்சர் கூறினார்.

ஒரு kg நாட்டு அரிசியின் விலையை 105 ரூபாவுக்கு குறைவாகவும், சுப்பிரி சம்பா ஒரு kg 130 ரூபாவுக்கு குறைவாகவும் இந்த ஆண்டு இறுதி வரையில் பராமரிக்கும் பொறுப்பை லங்கா சதொச மேற்கொள்ளும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பயறு 225 ரூபாவுக்கு சதொச விற்பனை நிலையங்களில் மட்டுமே கிடைக்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு kg பயறு 225 ரூபாவுக்கு வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

விவசாயிகளிடமிருந்து ஒரு kg பயறு 450 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியதாக அமைச்சர் கூறினார்.

பயறு 225 ரூபாவுக்கு சதொச விற்பனை நிலையங்களில் மட்டுமே கிடைக்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.

#srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....