2 1 9
இலங்கைசெய்திகள்

கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம்! வெளியான மகிழ்ச்சி தகவல்

Share

கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம்! வெளியான மகிழ்ச்சி தகவல்

கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் மானியமாக அடுத்த 5 மாதங்களுக்கு மாதாந்தம் 9,375 ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இன்று (10) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தத் தீர்மானம் கடற்றொழிலாளர்களுக்கான மானியத்தை பெற்றுக்கொள்ளும் முறையை இலகுபடுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் காலத்திற்கும் டீசல் மானியம் லிற்றருக்கு 25 ரூபா வழங்கப்படும்.

பொருளாதார நெருக்கடியால் கடற்றொழிலாளர்கள் சந்தித்து வரும் சிரமங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் கடந்த அக்டோபர் 1ஆம் திகதி முதல் டீசல், மண்ணெண்ணெய் மானியம் வழங்கும் பணியை அரசு தொடங்கியது.

அங்கு டீசல் மானியம் லீற்றருக்கு 25ரூபாவும், மண்ணெண்ணெய் லீற்றருக்கு 25ரூபாவும் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 15 லீற்றர் என்ற அடிப்படையில் ஒரு மாதத்தில் 25 நாட்களுக்கு வழங்கப்பட்டது.

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட புதிய மானிய முறைமைக்கு இந்த மானியம் நடைமுறைப்படுத்தப்படும் போது இனங்காணப்பட்ட குறைபாடுகளுக்கு அமைவாக அமைச்சர்கள் சபையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.

000000000000

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...