8 12
இலங்கைசெய்திகள்

போர் பதற்றம் : இஸ்ரேலுக்கு படையெடுக்கும் ஆயிரக்கணக்கான இலங்கையர்

Share

போர் பதற்றம் : இஸ்ரேலுக்கு படையெடுக்கும் ஆயிரக்கணக்கான இலங்கையர்

இஸ்ரேலுக்கும் (israel)இலங்கைக்கும்(sri lanka) இடையிலான ஒப்பந்தத்தின்படி 13.04.2024 முதல் 30.11.2024 வரை இஸ்ரேலின் கட்டுமானத் துறையில் வேலைக்காக 4531 பேர் சென்றுள்ளனர். இவ்வாறு இஸ்ரேலுக்கு சென்றவர்கள் 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிறுவப்பட்ட இஸ்ரேலிய கட்டுமானத் துறையில் பணிபுரிந்தவர்களாவர்.

இந்த ஆண்டு டிசம்பர் முதல் 2025 ஜனவரி வரை இஸ்ரேலிய வேலைகளுக்காக 1802 பேர் செல்ல உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறுகிறது.

இதேவேளை இஸ்ரேலிய கட்டுமானத் துறையில் வேலை தேடுபவர்கள் குலுக்கல் முறையின் கீழ் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்று தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் மோசடியாக பணம் பெறும் நபர்கள் மற்றும் குழுக்களை பணியகம் கண்டறிந்துள்ளது.

அதனடிப்படையில், மோசடியாக பணம் பெறுவது அல்லது கொடுப்பது இலஞ்ச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது எனவும், இவ்வாறான மோசடிச் செயல்களில் சிக்காமல் இருக்குமாறும், சட்டரீதியாக வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லுமாறும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறு மோசடியான முறையில் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நபர்கள் இருப்பின் அவ்வாறானவர்கள் பற்றிய தகவல்களை பணியகத்தின் 1989 தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பணியகம் கேட்டுக்கொள்கிறது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...