24 667f7cfe0ff26 25
இலங்கைசெய்திகள்

வீதியில் செல்லும் பெண்களிடம் நகைகளை அறுக்கும் நகைக்கடை உரிமையாளர் கைது

Share

வீதியில் செல்லும் பெண்களிடம் நகைகளை அறுக்கும் நகைக்கடை உரிமையாளர் கைது

நெடுஞ்சாலையில் பயணிக்கும் பெண்களின் கழுத்தில் வாளை வைத்து அச்சுறுத்தி அவர்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளை கொள்ளையடிக்கும் கும்பலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் தங்க நகைக்கடை உரிமையாளர் மற்றும் பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருடப்பட்ட சில தங்க ஆபரணங்கள், வாள், மோட்டார் சைக்கிள் மற்றும் கைக்குண்டு போன்றவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சில காலமாக மரதகஹமுல துனகஹாவை சுற்றியுள்ள கிராமங்களில் வீதிகளில் பயணிக்கும் பெண்களிடம் தங்க ஆபரணங்கள் திருடப்படுவதாக செய்திகள் வெளியாகி வந்தன.

இதன்படி, பாலியபிட்டிய பிரதேசத்தில் இரண்டு தங்கச் சங்கிலிகளை அறுத்துக்கொண்டு ஓடிய மோட்டார் சைக்கிளை துரத்திச் சென்ற காவல்துறை குழு, படல்கம காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஹொரகண்டவில பிரதேசத்தில் சந்தேகநபர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி கவிழ்ந்தது.

அதன்போது, ​​பிரதேச மக்களின் உதவியுடன் கொள்ளையர்களை கைது செய்துள்ளதாகவும், மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மினுவாங்கொடை, ஹொரம்பெல்ல பிரதேசத்தில் தற்காலிகமாக வசிக்கும் மீரிகம ஹல்பே பிரதேசத்தை சேர்ந்த ஒருவரும், ஜா அல பிரதேசத்தை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...