இலங்கையில் தங்கத்தின் விலை இன்றும் 15 ஆயிரம் ரூபா அதிகரித்து 2 இலட்சம் ரூபா என வரலாற்றில் முதல் தடவையாக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இன்று மாலை இந்த அதிகரிப்பு ஏற்பட்டது என்று தங்க வியாபாரிகள் தெரிவித்தனர்.
இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி நெகிழ்வான நிலைக்கு விடப்பட்டதால் டொலரின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் இலங்கையில் தங்கம் மீதான விலையில் தாக்கம் செலுத்தியுள்ளது
யாழ்ப்பாணத்தில் இன்று 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 83 ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு இலட்சத்து 69 ஆயிரத்து 500 ரூபாவாகக் காணப்பட்டது.
அதேவேளை, 24 கரட் தூய தங்கம் இன்று பவுண் ஒன்று 2 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது. நேற்று 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு பவுண் ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ரூபாவாகக் காணப்பட்டது.
#SriLankaNews