tamilni 377 scaled
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றில் ஜனாதிபதி உறுதி

Share

நாடாளுமன்றில் ஜனாதிபதி உறுதி

காசா பிரச்சினைக்கு அரசியல் தீர்வு இல்லாமையே காரணமாகும் எனவும் இதனால் இலங்கையிலும் வடக்குக்கு அரசியல் தீர்வு வழங்கி வடக்கை அபிவிருத்தி செய்யவுள்ளோம் எனவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (23.11.2023) நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பினார்.

குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாங்கள் தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு எமது தொழிலாளர்களை நீண்ட காலமாக அனுப்பி வருகின்றோம். அதன் பிரகாரம் தொழில் அமைச்சர் அடுத்த கட்டமாக இஸ்ரேலுக்குத் தொழிலுக்கு அனுப்ப ஒப்பந்தம் செய்திருக்கின்றார்.

இஸ்ரேலுக்குத் தொழிலுக்குச் செல்ல தற்போது 10 ஆயிரம் பேர் தயாராக இருக்கின்றார்கள் என நான் நினைக்கவில்லை. யுத்தம் இடம்பெறும் நாட்டுக்குச் செல்ல யாரும் விரும்பமாட்டார்கள்.

எனினும், தற்போதைய நிலையில் இஸ்ரேலுக்குச் செல்வது எந்தளவு பொருத்தம் எனத் தெரியாது. இது தொடர்பாக நான் தொழில் அமைச்சரிடம் வினவுகின்றேன்.

அத்துடன் எமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. காசா மீது இஸ்ரேலின் தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டித்திருக்கின்றோம்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலையும் நாங்கள் கண்டித்திருந்தோம். இதற்குத் தீர்வு காசா மீது தாக்குதல் மேற்கொள்வதல்ல.

பாலஸ்தீன அதிகார சபை ஊடாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணுவது தொடர்பாக பலரும் கதைத்து வருகின்றனர்.

அமெரிக்காவும் பேசி இருந்தது. அதகார சபை ஊடாகத் தீர்வு காண முடியும் என நான் நினைக்கவில்லை.

அரசியல் தீர்வு இல்லாமையே இதற்குக் காரணமாகும். அதனால் அரசியல் தீர்வொன்றை வழங்குவதன் மூலமே அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று நாங்கள் நினைக்கின்றோம்.

அத்துடன் இலங்கையிலும் நாங்கள் வடக்குக்கு அரசியல் தீர்வு வழங்கி வடக்கை அபிவிருத்தி செய்யவுள்ளோம். ஏனெனில் வடக்கில் சிறந்த பொருளாதாரம் இருக்கின்றது.

குறிப்பாக பசுமைப் பொருளாதாரம், எரிசக்தி தொடர்பான பொருளாதாரம் போன்ற பல வளங்கள் அங்கு இருக்கின்றன.

அதனால் அடுத்த தசாப்தத்தில் வடக்கில் பலமான பொருளாதாரத்தை உருவாக்குவதே எமது இலக்காகும்.

எனவே, காசா தொடர்பில் எமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அது தொடர்பாக ரவூப் ஹக்கீம் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை” என்றார்.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...