Sivagnanam Sritharan
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணில் எப்படி இலங்கையில் பிறந்தார் என்று கடவுளுக்கே தெரியாது!!

Share

காட்டில் வாழும் மிருகங்களில் தந்திரமான மிருகமாக நரியை கூறுவதை போன்று, நாட்டில் வாழும் மனிதர்களில் மிகவும் தந்திரம் மிக்கவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றார் என்றும், இவர் எப்படி இலங்கையில் பிறந்தார் என்று கடவுளுக்கே தெரியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அத்தியாவசிய சேவைகள் பிரகடனம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் தேர்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு அது நடக்காது என்பது ஜனாதிபதியின் கருத்தின்மூலம் அறியமுடிகின்றது. நாடு சர்வாதிகாரத்தை நோக்கி போகின்றது என்பது இப்போது நடக்கும் நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. காட்டில் வாழும் மிருகங்களில் தந்திரமான மிருகமான நரியை கூறுவதை போன்று, நாட்டில் வாழும் மனிதர்களில் மிகவும் தந்திரம் மிக்கவராக ஜனாதிபதியை கூறுகின்றனர்.

பொருளாதாரம் வீழ்ந்துள்ள நிலையில் அதற்கான காரணத்தை கண்டறியாது, அதனை கட்டியெழுப்பும் திட்டங்களை முன்வைக்காது ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றுவதன்மூலம் தீர்வு காண முடியாது. கடவுளுக்கு தெரியாது பிறந்தவர்களை போன்று ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டில் எப்படி பிறந்தார் என்று கடவுளுக்கே தெரியாமல் இருக்கும். அந்தளவுக்கு அவரின் நடவடிக்கைகள் இருக்கின்றன. ஜனநாயகம், நீதி இன்றி மக்களின் வாழ்க்கை அடகு வைக்கப்படுகின்றது.

இதேவேளை இந்த பாராளுமன்றம் கோமாளிகளின் கூடாரங்கள் போன்றே இருக்கின்றது. இதன்மூலம் மக்களுக்கு ஏதேனும் கிடைக்கின்றதா? நாட்டுக்காக உணவு வழங்கும் விவசாயிகள் வீதிகளுக்கு வந்துள்ளனர். அவர்களின் நகைகள் அடகுகளில் இருக்கின்றன.

நாட்டை சீரான பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். இந்த மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். நாடு பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்து மக்கள் நாளாந்தம் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு மக்கள் கையெந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நாடு மிகவும் மோசமான வறுமைக்குள் நாடு தள்ளப்பட போகின்றது – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...