Dhammika Perera 1
அரசியல்இலங்கைசெய்திகள்

கோ ஹோம் ரணில் – தம்மிக்க பெரேரா முழக்கம்!

Share

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சு பதவியை உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும்.” – என்று முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா இன்று வலியுறுத்தினார்.

டொலர்களை உள்ளீர்ப்பதற்கான உரிய வேலைத்திட்டம் ரணிலிடம் இல்லை எனவும், நிதி அமைச்சராக அவர் முன்னெடுக்கும் ‘அரசியல் கேமும்’ நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

டொலர்களை திரட்டுவதற்கான வழிமுறைகளை ரணில் தடுத்து வருகின்றார், நாட்டு மக்களை பட்டினியில் இருந்து மீட்பதற்கான திட்டமும் அவரிடம் இல்லையெனவும் தம்மிக்க பெரேரா சுட்டிக்காட்டினார்.

எனவே, பிரச்சினைகளுக்கு மத்தியில் பயணிக்காமல், நிதி அமைச்சு பதவியை ரணில் விக்கிரமசிங்க துறக்க வேண்டும் என்றார் அமைச்சர் தம்மிக்க.

அதேவேளை, எதிர்வரும் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ள போராட்டமானது, நாட்டுக்கு டொலர்களை திரட்டுவதற்கான வழிமுறைகளை காண்பிக்கும் போராட்டமாக அமைய வேண்டும் எனவும் அவர் யோசனை முன்வைத்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 6
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம், வளலாய் கடற்கரையில் பௌத்த சிலை கரையொதுங்கியது – மியன்மாரிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகம்!

யாழ்ப்பாணம், வளலாய் பகுதி கடற்கரையில் இன்றைய தினம் (நவம்பர் 17) பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை...

25 6918218c86028
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த இளைஞன் எதிர்வரும் நவம்பர் 28 வரை விளக்கமறியலில்!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம்...

25 68f5630be3ac6
செய்திகள்இலங்கை

இலங்கைச் சிறைச்சாலைகளில் கட்டுக்கடங்காத நெரிசல்: 37,000 கைதிகள் அடைப்பு – ‘500 பேர் நின்று உறங்குகிறார்கள்’ எனப் பாராளுமன்றில் அம்பலம்!

இலங்கைச் சிறைச்சாலைகளில் நிலவும் கட்டுக்கடங்காத நெரிசல் மற்றும் அதன் காரணமாகக் கைதிகள் எதிர்கொள்ளும் மனிதநேயமற்ற நிலைமைகள்...