முகப்புத்தகக் காதலால்
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

முகப்புத்தகக் காதலால் சீரழிக்கப்பட்ட சிறுமிகள்!

Share

முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் இரண்டு சிறுமிகள் கடந்த 16ஆம் திகதி காணாமல்போன நிலையில் அவர்களைத் தேடும் நடவடிக்கையில் பெற்றோர்கள், கிராமத்தினர், பொலிஸார் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று மாலை புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் இருவரும் மீட்கப்பட்டுள்ளார்கள்.

சிறுமிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் விடயங்கள் வெளிவந்துள்ளன.

அந்தச் சிறுமிகளில் ஒருவர் ‘பேஸ்புக்’ ஊடாக மட்டக்களப்பு – செங்கலடிப் பகுதி இளைஞர் ஒருவருடன் காதல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த இளைஞர் சிறுமியை மட்டக்களப்புக்கு வருமாறு அழைத்துள்ளமையைத் தொடர்ந்து சிறுமி தனது நண்பியுடன் வீட்டில் மாலைநேர கல்விக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டு சைக்கிளில் புறப்பட்டிருக்கின்றார்.

சைக்கிளைப் பற்றைக்காட்டுக்குள் விட்டு பஸ்ஸில் ஏறி மட்டக்களப்பு செங்கலடிக்கு இருவரும் சென்றுள்ளார்கள்.

செங்கலடி இளைஞர் இருவரையும் காரில் ஏற்றிச் சென்று, தான் பேசிய சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளமையைத் தொடர்ந்து, அவர்களை வீடு செல்ல அழைத்துக் கொண்டு வந்து யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் பஸ்ஸில் ஏற்றிவிட்டுள்ளார்.

இரண்டு சிறுமிகளும் யாழ்ப்பாணம் சென்று யாழ். நகரப் பகுதியில் சுற்றித் திரிந்த வேளையில் கடை ஒன்றில் பொருள்களை வாங்கியபோது நள்ளிரவாகியுள்ளது.

இரண்டு சிறமிகளுக்கும் உதவி செய்வதாகக் கூறி இரண்டு இளைஞர்கள் சிறுமிகளை அழைத்துக்கொண்டு சென்று வீடு ஒன்றில் தங்கவைத்து, மற்றைய சிறுமியுடன் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

அடுத்த நாள் யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு பஸ்ஸில் இரண்டு சிறுமிகளும் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளனர். இரண்டு சிறுமிகளும் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வந்திறங்கியுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பில் இரண்டு சிறுமிகளின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளமையைத் தொடர்ந்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டு, இருவரும் கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் இருவரிடத்திலும் பெறப்பட்ட வாக்குமூலத்தைத் தொடர்ந்து இரண்டு சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

சிறுமிகள் இருவருடனும் பாலியல் துஷ்பிரயோகத்தை மேற்கொண்டவர்கள் தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 657a8557d51bd md
செய்திகள்இலங்கை

காய்கறி விலையில் கடும் அதீத உயர்வு: பச்சை மிளகாய் 1,000 ரூபாயைத் தாண்டியது; மக்கள் கடும் அவதி!

இலங்கையின் சில பகுதிகளில் தாழ்நிலக் காய்கறிகளின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதீத உயர்வை எட்டியுள்ளதாகச்...

25 6943e3aa87891
செய்திகள்உலகம்

தன்னை ‘ஹீரோவாக’ காட்டிக்கொள்ள 12 நோயாளிகளைக் கொன்ற மருத்துவர்: பிரான்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிப்பு!

பிரான்சில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்குத் திட்டமிட்டு விஷ ஊசி செலுத்தி, 12 பேரின் மரணத்திற்கு காரணமான...

1813418 flight12
செய்திகள்இந்தியா

அடர்ந்த மூடுபனி: டெல்லி விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

வட இந்தியா முழுவதும் நிலவி வரும் கடுமையான மூடுபனி காரணமாக, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச...

674b2a65b606d hardik pandya in frame 191544440 16x9 1
விளையாட்டுசெய்திகள்

தென்னாபிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி: 16 பந்துகளில் அரைசதம் அடித்து ஹர்திக் பாண்டியா புதிய சாதனை!

தென்னாபிரிக்காவிற்கு எதிரான 5-ஆவதும் கடைசியுமான டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில்...