பருத்தித்துறை பகுதியில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமி ஒருவரை வன்புணர்ந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் தனித்து நின்ற சிறுமியிடம் (வயது – 15) பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
நேற்றுமுன்தினம் இரவு பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட குறித்த சிறுமி, இருவேறு நேரங்களில் 2 இளைஞர்களினால் வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார்.
சட்ட மருத்துவ வல்லுநரின் மருத்துவ அறிக்கைக்காக பாதிக்கப்பட்ட சிறுமி பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கைதான இளைஞர்கள் 19 மற்றும் 24 வயதுடையவர்கள். இருவரும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் அவர்கள் முற்படுத்தப்படவுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment