Arrested
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுமி வன்புணர்வு!! – பருத்தித்துறை இளைஞர்கள் கைது

Share

பருத்தித்துறை பகுதியில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமி ஒருவரை வன்புணர்ந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் தனித்து நின்ற சிறுமியிடம் (வயது – 15) பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

நேற்றுமுன்தினம் இரவு பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட குறித்த சிறுமி, இருவேறு நேரங்களில் 2 இளைஞர்களினால் வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார்.

சட்ட மருத்துவ வல்லுநரின் மருத்துவ அறிக்கைக்காக பாதிக்கப்பட்ட சிறுமி பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கைதான இளைஞர்கள் 19 மற்றும் 24 வயதுடையவர்கள். இருவரும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் அவர்கள் முற்படுத்தப்படவுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...