6 33
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் முதியவரால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி

Share

மன்னார்(Mannar) அடம்பன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 68 வயது முதியவரால் 14 வயது சிறுமி தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கடந்த எட்டு மாத காலத்திற்கு மேலாக சிறுமியை மிரட்டியே தகாத உறவு வைத்துக் கொண்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எனினும் சிறுமி தனது பெற்றோருக்கு சம்பவம் குறித்து தெரியப்படுத்தியபோதும் அவர்கள் இதுதொடர்பில் எந்தவிதமான அக்கறையும் கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பாடசாலை ஆசிரியர் ஊடாக இந்த விடயம் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து விசாரணைகள் முன்னெடுத்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய முதியவரை கைது செய்துள்ளனர்.

குறித்த முதியவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில், வழக்கானது கடந்த 20.05.2025 அன்று நீதிமன்றத்தினால் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முதியவரை எதிர்வரும் 28.05.2025 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பான விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....